Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 12 வகுப்பறைகளை எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் இன்று திறந்து வைத்தார். அங்கு மரக்கன்றுகளையும் அவர் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. அன்பழகன், மற்ற எம்.எல்.ஏ.க்களைக் காட்டிலும் கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட எம்.எல்.ஏ. நிதியை ஒரு பைசா கூட வீணாக்காமல் மக்களுக்கான மூலதன திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.